இணையவழிக் கல்விவானொலி எனும் எளிய தொழில்நுட்பம்...
குரல் பதிவு எனும் எளிய செயல்பாடு
அரசுப்பள்ளி ஆசிரியர்களின் தன்னார்வக் கூட்டு முயற்சி...
பாடப்புத்தக பகுதிகள், எண்ணும் எழுத்தும் பகுதிகள், பயிற்சிப்புத்தகம், புத்தகப்பூங்கொத்துகள், நூலகப்புத்தகங்கள், தேன்சிட்டு இதழ், ஊஞ்சல் இதழ்., மேலும் செய்தித்தாள், வாரமலர், சிறுவர்மலர் போன்றவற்றிலுள்ள பகுதிகளை மாணவர்கள் தன்னார்வமாக பங்கேற்க வழிகாட்டி
அவர்களின் குரல் பதிவு செய்து அனுப்பலாம்.
கற்றலில் இனிமை, கற்பித்தலில் புதுமை
மாணவர்களிடம் தங்கள் குரல்களை பதிவு செய்யபோகிறோம் என்றவுடன் அவர்களிடம் ஆர்வம் ஏற்பட்டு தன்னார்வமாக பங்கேற்கின்றனர். [மெல்ல மலரும் மாணவர்கள் உட்பட]ஆசிரியர்களுக்கான ஆவணம், பள்ளிக்கான தளம்
மாணவர்களின் குரல் பதிவுகளை அவரவர்களின் Unique Page எனும் இணைய பக்கத்தில் பதிவேற்றி வைப்பதன் மூலம் கல்வி அலுவலர்களும், பெற்றோர்களும் எங்கிருந்தும், எப்போதும் கேட்கலாம். மாணவர்களின் வாசித்தல் திறனின் நிலை மேம்பாட்டினை அறியலாம்.சுயமதிப்பீடு, சுயகற்றல்
மாணவர்கள் தனது குரல்களை தானே கேட்கும் போது மனமகிழ்ச்சி அடைகின்றனர். மேலும் தனது பேச்சில் உள்ள பிழையை தானே அடையாளம் காண்கின்றனர். மேலும் பலவற்றை தானே தேடி தொகுத்து கற்கின்றனர்.
மேலும் பல பயன்களை உள்ளடக்கிய எளிய தொழில்நுட்பம்...